Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தந்தையின் கள்ளக்காதலியை சரமாரியாக செட்டிய வாலிபர்

தந்தையின் கள்ளக்காதலியை சரமாரியாக செட்டிய வாலிபர்
, செவ்வாய், 28 ஜூலை 2015 (20:57 IST)
திருநெல்வேலி வள்ளியூர் அருகே தந்தையின் கள்ளக்காதலி மற்றும் அவரது கணவனை சரமாரியாக வெட்டித்தள்ளிய வாலிபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள ஆ.திருமலாபுரத்தை சேர்ந்தவர் செல்லத்துரை, விவசாயி. இவரது மனைவி அற்புதக்கனி (வயது 47). அதே பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் (55). இவருக்கும் அற்புதக்கனிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.
 
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி, பழகி வந்தனர். இதுபற்றி அறிந்த பொன்ராஜின் மகன் வசந்த் (30) அற்புதக்கனியிடம் சென்று எனது தந்தையுடன் இனிமேல் பேசக்கூடாது என்று கூறினார். ஆனாலும் இருவரும் தொடர்ந்து சந்தித்து பேசி வந்தனர்.
 
இந்நிலையில் சம்பவத்தன்று அற்புதக்கனி வீட்டிற்கு சென்ற வசந்த் அவரிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அற்புதக்கனியை சரமாரியாக வெட்டினார். இதனை தடுக்க வந்த அவரது கணவர் செல்லத்துரைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
 
பலத்த வெட்டுக்காயம் அடைந்த கணவன்–மனைவி இருவரும் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வசந்தும் தனக்கு காயம் ஏற்பட்டதாக கூறி நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இச்சம்பவம் குறித்து வள்ளியூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன்–மனைவிக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் வள்ளியூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil