சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

J.Durai
சனி, 28 செப்டம்பர் 2024 (18:48 IST)
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் கீழ ஒட்டம்பட்டி  பகுதியில் சிவகாசி பகுதியைச் சேர்ந்த   கந்தசாமி என்பவருக்கு சொந்தமான திருமுருகன்  பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. 
 
இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று  ஆலையில் பேன்சி ரக  ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. 
 
இந்த பட்டாசு ஆலையில் சுமார் 30க்கும் மேற்பட்ட அறைகளில் 80க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
வழக்கம்போல இன்று காலை பட்டாசு தயாரிக்க ஆயத்தப் பணியாக பட்டாசு மருந்துகள் கலக்கும் பணியில் வட இந்தியர்கள் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர் அப்போது ஊராய்வினால் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாக தெரிய வருகிறது.
 
தற்போது வரை வெடி விபத்து ஏற்பட்டு வருவதால் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் அருகில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
 
மேலும் உள்ளே வட இந்திய தொழிலாளர்கள் இருந்து வருவதாக தெரிவித்து வருகின்றனர் மேலும் தற்போது வரை பட்டாசு வெடித்து சிதறி வருவதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. 
 
மீட்பு பணி முழுமை அடைந்த பின்பு பலி குறித்த தகவல் தெரிவிக்கப்படுவதாக காவல்துறை என தெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments