Webdunia - Bharat's app for daily news and videos

Install App

106 வயதான ரிப்பன் கட்டிடத்தில் விரிசல் – காரணம் மெட்ரோ ரயிலா ?

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (13:46 IST)
புராதனமான ரிப்பன் கட்டிடத்தில் விழுந்துள்ளது சிலைக்கு அருகில் நடைபெறும் மெட்ரோ ரயில் பாதைக்கான பணிகள்தான் காரணம் என கூறப்படுகிறது.

சென்னையின் புராதனமான கட்டிடமான ரிப்பன் கட்டிடத்துக்கு வயது 106.. அந்த கட்டிடத்தில் தற்போது மாநகர ஆணையர் மற்றும் துணை ஆணையர்களின் அலுவலகம் அமைந்துள்ளது. சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் இந்த கட்டிடம் சென்னையின் அடையாளங்களில் ஒன்று. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின்போது சென்னைப்பட்டின விரிவாக்கத்தை அடுத்து இந்த கட்டிடம் ரூபாய் 7.5 லட்சம் செலவில் கட்டப்பட்டது.

இந்நிலையில் இந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து இரண்டாம் தளம் வரை விரிசல் விழுந்துள்ளது. இந்த விரிசல் உள் மற்றும் வெளிப் பகுதிகளில் உள்ளதாக தெரிகிறது. கட்டிடத்தின் அருகில் மெட்ரோ ரயிலுக்கான பாதை அமைக்கும் பணிகள் ஆரம்பித்ததில் இரு
ந்துதான் இந்த விரிசல் விழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரிசலை சரிசெய்யும் பணிகளை செய்து புராதன கட்டிடத்தை காக்கவேண்டும் என சமூகவலைதளங்களில் குரல்கள் எழுந்துள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments