Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சையில் திமுக கூட்டணியில் விரிசல் – தனித்துப் போட்டியிடும் சிபிஎம் !

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (14:59 IST)
தஞ்சை மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் கூட்டணி தர்மத்தை மதிக்காததால் தனித்துப் போட்டியிடப் போவதாக சிபிஎம் கட்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சிபிஎம் கட்சி கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவோடு கூட்டணி அமைத்தது சிபிஎம் கட்சி. அதன் பின் வந்த இடைத்தேர்தலிலும் திமுகவுக்காக சீட்களை விட்டுக்கொடுத்து தேர்தலில் நிற்காமல் கூட்டணி தர்மத்தைக் காப்பாற்றியது.

அதன் பின் வந்த உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்கிறது. இந்நிலையில் தஞ்சையில் மட்டும் சிபிஎம் கட்சி தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. இதற்குக் காரணம் தஞ்சை மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகர் கூட்டணி தர்மத்தை மதிக்காமல் போதுமான சீட்களை ஒதுக்க மறுப்பதே காரணம் என சொல்லப்படுகிறது.

இந்த விரிசல் இரு கட்சித் தலைமைக்கும் சென்று விரைவில் முடிவு எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments