Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டில் மாடு முட்டி பெண் பலி !

Webdunia
வியாழன், 16 ஜனவரி 2020 (12:23 IST)
தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு மதுரை அவனியாபுரம் மற்றும் வாடிவாசல் போன்ற இடங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நேற்று  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்க உலகில் பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர்.
அதேபோன்று திருச்சி சூரியூரிலும், மதுரை பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தற்போது நடௌபெற்று வருகிறது.
 
இந்நிலையில், திருச்சி சூரியூரில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 400 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. இந்தப் போட்டியை காண மக்கள் திரண்டிருந்தனர்.
 
அப்போது, நிகழ்ச்சியை காண வந்திருந்த ஜோதிலெட்சும் என்ற பெண்ணை மாடு முட்டியது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments