Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேஷன் கடைகளில் திமுக சின்னம் வைக்கக் கூடாது… நீதிமன்றம் கறார்!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (07:34 IST)
கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் ரேஷன் கடைகளுக்கு அருகே திமுக சின்னம் பொறிக்கப்பட்ட பேனர்கள் வைக்கப்படுவது குறித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா கால நிவாரண தொகையாக பதவியேற்றுள்ள திமுக அரசு, முதல் கட்டமாக 2000 ரூபாய் வழங்கியுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக 2000 ரூபாய் ஜூன் 3 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிவாரணத் தொகை வழங்கும் கடையில் திமுக சின்னம் மற்றும் தலைவர்கள் புகைப்படம் இருக்கும் பேனர்கள் வைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது சம்மந்தமாக அதிமுகவைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ‘மக்களால் தேர்ந்தெடுத்த முதல்வரின் புகைப்படம் கடைகளுக்கு அருகே வைக்கப்படுவதில் தவறில்லை. ஆனால் ஆளும் கட்சியின் சின்னம் இருக்கக் கூடாது. நிவாரணம் வழங்குவது அரசியல் நிகழ்ச்சியாக மாறக்கூடாது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments