Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியை கடத்தி சென்று முத்தம்! – இளைஞருக்கு சிறை தண்டனை!

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (15:10 IST)
அரியலூரில் சிறுமியை கடத்தி சென்று முத்தம் கொடுத்த இளைஞருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் அவரது வீட்டிற்கு பக்கத்தில் வசித்து வந்த 8 வயது சிறுமியை பைக்கில் கடத்தி சென்று முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாரிமுத்தை கைது செய்த போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் இன்று இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதன்படி மாரிமுத்துவுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments