Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிணறு வெட்ட பூதம் – டாஸ்மாக் கடைகளுக்கு இன்று லீவ் ?

Webdunia
புதன், 30 ஜனவரி 2019 (08:29 IST)
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை இன்று முழுவதும் மூடவேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கிணறு வெட்ட பூதம் தோன்றியது போல எதற்கோ வழக்குப் போட்டால் எதுவோ நடந்துள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த ரதீஷ் என்பவர் தங்கள் பகுதியான விளவங்காடு குடியிருப்ப்புப் பகுதிக்குள் உள்ள டாஸ்மாக் கடையினை மூடவேண்டும் என சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனு மீதான விசாரணை நேற்று  விசாரணைக்கு வந்தது. வழக்கின் எதிர் மனுதாரராக  மதுவிலக்கு ஆயப்பிரிவைச் சேர்த்த நீதிபதிகள் சம்மந்தப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றுவது தொடர்பாக, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் என்று கூறி, இவ்வழக்கின் விசாரணையை பிப்ரவரி 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதனையடுத்து நாளை (இன்று- ஜனவரி 30 ) காந்தியடிகளின் நினைவு நாளை ஒட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர். எப்போதும் காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2 ஆம் நாள்தான் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறைஅளிக்கப்படும். ஆனால் இந்த் ஆண்டு அவரது நினைவு நாளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டுக்கு மட்டுமா அல்லது இனிவரும் ஆண்டுகளில் இது தொடருமா என்ற விவரங்களை நீதிபதிகள் குறிப்பிடவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments