Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதி குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு..!

Mahendran
திங்கள், 14 அக்டோபர் 2024 (14:30 IST)
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்ய கரூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கரூரைச் சேர்ந்த தமிழ் ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர், கரூர் நீதிமன்றத்தில் சீமான் மீது வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பும் வகையில் சீமான் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்ய கரூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பட்டியல் ஜாதி குறித்து அவதூறாக பேசியது தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டமன்ற கூட்டம் நடைபெற்றபோது ஆன்லைன் ரம்மி விளையாடிய அமைச்சர்... வீடியோவால் பெரும் சர்ச்சை..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்.. குளித்தலையில் அதிர்ச்சி சம்பவம்..!

திருமண நிச்சயதார்த்தத்திற்கு பின் பலமுறை பாலியல் பலாத்காரம்.. பாஜக எம்பி மகன் மீது பெண் புகார்..!

Facial Recognition தொழில்நுட்பத்தால் கைது செய்யப்பட்ட தீவிரவாதி.. ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு..!

ரூ.3,500 கோடி ஊழல் மதுபான ஊழல் வழக்கு: முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பெயரும் சேர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments