Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”பட்டியலின சமூகத்திற்கு வாய்ப்பளிக்கவில்லை”; மனு அளித்த அவனியாபுர மக்கள்; நீதிமன்றம் கறார் உத்தரவு!!

Arun Prasath
திங்கள், 13 ஜனவரி 2020 (14:41 IST)
ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

10 வருடங்களாக விழாக்கமிட்டிக்கு தலைமை வகிக்கும் ஜல்லிக்கட்டு குழுவின் தலைவர், கணக்குகளை முறையாக சமர்ப்பிப்பதில்லை எனவும், தன்னிச்சையாக செயல்பட்டு முடிவுகளை எடுத்து வருகிறார் எனவும் அவனியாபுரத்தை சேர்ந்த பலரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளித்திருந்தனர்

மேலும், அந்த மனுவில், ”பட்டியலின சமூகத்தினருக்கு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் பங்கெடுக்க வாய்ப்பளிக்கப்படவில்லை. எனவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கிராம மக்களின் அனைத்து சமூக பங்கெடுப்புடன் கூடிய விழாக்குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, ”ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில், மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர்,மாநகராட்சி ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும்” என உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments