Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுமதி தேவையில்லை; தகவல் சொன்னா போதும்! – சமரசமாக தீர்ப்பளித்த நீதிமன்றம்

Webdunia
வியாழன், 16 ஏப்ரல் 2020 (12:06 IST)
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க அரசு விதித்த தடை தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வலர்கள் நிவாரண உதவிகளை வழங்கி வந்தனர். இவ்வாறு நிவாரண உதவிகள் வழங்குவதில் சமூக இடைவெளி சரியாக கடைபிடிக்கப்படுவதில்லை என தன்னிச்சையாக நிவாரண உதவிகள் வழங்க தடை விதித்தது தமிழக அரசு. மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரணைக்கு பிறகு இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம் நிவாரண பொருட்களை வழங்க அனுமதி வாங்க தேவையில்லை, ஆனால் இரண்டு நாட்கள் முன்னரே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. மேலும் நிவாரண பொருட்களை வழங்க நான்கு பேருக்கு மேல் செல்லக்கூடாது என சில விதிமுறைகளையும் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments