Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக தொடர்ந்த வழக்கு - சபாநாயகர் பதிலளிக்க உத்தரவு

Webdunia
புதன், 4 அக்டோபர் 2017 (11:50 IST)
அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து திமுக தொடர்ந்த வழக்கில் சபாநாயகர் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


 

 
கடந்த பிப்ரவர் மாதம் 18ம் தேதி சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்பட்ட போது, ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் அவருக்கு எதிராக வாக்களித்தனர். ஆனால், அவர்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. அந்நிலையில், ஓ.பி.எஸ் அணி எடப்பாடி அணியுடன் இணைந்தது. 
 
ஆனால், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக செயல்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
 
அந்நிலையில், ஓ.பி.எஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கடந்த 8 மாத காலமாக சபாநாயகர் காலம் தாழ்த்தியது ஏன் என கோரி திமுக தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்நிலையில், அந்த வழக்கு இன்று நீதிமன்றதில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக வருகிற அக்டோபர் 12ம் தேதிக்குள் சபாநாயகர், பேரவை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments