Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆறுமுகச்சாமி ஆணையம் குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (16:13 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்வதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த ஆணையம் அமைக்கப்பட்டு 4 வருடங்கள் ஆன பின்னரும் இன்னும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யாமல் உள்ளது. மேலும் தற்போது விசாரணை நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இந்த நிலையில் செயல்படாத ஆணையத்தால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது என்று பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் மூன்று மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும்படி ஏன் உத்தரவிடக் கூடாது என்று கூறியுள்ளது
 
இதுகுறித்து தமிழக அரசு 6 வாரங்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு தமிழக அரசு என்ன பதிலளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments