Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்க கூடாது? நீதிமன்றம் கேள்வி!

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2020 (17:42 IST)
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது புகார்கள் குவிந்துள்ள நிலையில் அந்த  புகார்களை விசாரிக்க சமீபத்தில் தமிழக அரசு விசாரணை கமிஷனை அமைத்தது. இந்த நிலையில் இந்த விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தனது மகளுக்கு முறைகேடாக பதவி கொடுத்ததாகவும் மேலும் சில முறைகேடுகள் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனடிப்படையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் சூரப்பா மீதான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என பதிவு செய்யப்பட்ட வழக்கில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மற்ற பல்கலைகழக துணைவேந்தர்கள் மீது புகார் எழுந்தபோது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில் சூரப்பா மீதான விசாரணைக்கு மட்டும் உடனடியாக கமிஷன் அமைத்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments