Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிசர்வ் வங்கிக்கு வந்த பணத்திலேயே கள்ள நோட்டுகள்! வங்கிகளில் விசாரணை!

Prasanth Karthick
ஞாயிறு, 10 நவம்பர் 2024 (11:23 IST)

நாட்டில் கள்ள நோட்டுகளின் புழக்கம் பெரும் தலைவலியாக இருந்து வரும் நிலையில் மத்திய ரிசர்வ் வங்கிக்கு, தேசிய வங்கிகளிடம் இருந்து வந்த பணத்திலேயே கள்ளநோட்டு இருப்பது கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

புதுச்சேரியில் இந்தியன் வங்கி, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல தேசிய வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகளில் இருந்து 6 மாதத்திற்கு ஒருமுறை ரூபாய் நோட்டுகள் சென்னை உள்ள மத்திய ரிசர்வ் வங்கியின் கிளைக்கு அனுப்பப்படுகின்றன.

 

அவ்வாறாக கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு வந்த ரூபாய் நோட்டுகளை பரிசோதனை செய்தபோது அதில் 500 ரூபாய் நோட்டிகளில் 55 நோட்டுகள் என மொத்தம் ரூ.27,500க்கு கள்ள நோட்டுகள் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

முன்னதாக வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது அதில் சில கள்ள நோட்டுகள் இருப்பது கண்டறியப்படும் சம்பவம் தொடர்ந்து வந்த நிலையில் தற்போது வங்கியிலிருந்து ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்ட பணத்திலேயே கள்ளநோட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 கேடுகெட்ட தேர்தலா இருக்கும்.. திமுக-பாஜக இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை: மணி

கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது சரிதான்: சீமான் ஆதரவு

2 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி: அதிர்ச்சி தகவல்..!

440 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் சமாதி.. திடீரென பக்தர்கள் கூட்டம் வந்ததால் பரபரப்பு..!

இன்ஸ்டாவில் பிரபலம்.. ரூ.1.35 கோடிக்கு சொத்து..! டிஸ்மிஸ் செய்யப்பட்ட பெண் காவல்துறை அதிகாரி..

அடுத்த கட்டுரையில்
Show comments