Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எச்சரிக்கை: சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி கலந்தாய்வு தேதி ஒத்திவைப்பு..!

Mahendran
திங்கள், 14 அக்டோபர் 2024 (16:34 IST)
சென்னையில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி போன்ற பாரம்பரிய மருத்துவக் கோர்சுகளுக்கான கலந்தாய்வு, 17-ம் தேதிக்கு திட்டமிடப்பட்டிருந்தது. இந்த மழை எச்சரிக்கையினால், கலந்தாய்வு தற்போது 21-ம் தேதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
 
2024-2025 ஆண்டுக்கான சித்தா (BSMS), ஆயுர்வேதா (BAMS), யுனானி (BUMS), ஓமியோபதி (BHMS) போன்ற பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை NEET தேர்வில் தகுதி பெற்றவர்களுக்காக நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வு தற்போது 21-ம் தேதி தொடங்கி, 29-ம் தேதி வரை நடைபெறும்.
 
முதல்நாளில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள், மற்றும் 7.5% உள்ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 22-ம் தேதி தொடங்கி, 29-ம் தேதி வரை நடைபெறும். 
 
கூடுதல் விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறும் மூவர்.. பிரிட்டன், அமெரிக்கர்கள்..!

நாளை 3 மாவட்டங்களில் அதிகனமழை: ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

உத்தவ் தாக்கரே மருத்துவமனையில் அனுமதி.. சிவசேனா தொண்டர்கள் அதிர்ச்சி..!

பள்ளி கல்வித்துறை நடத்தும் பொதுத்தேர்வு அட்டவணையை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்!

மத்திய அரசின் கோரிக்கையை மாநில அரசு நிறைவேற்றினால் கல்விக்கான நிதியை விடுவிக்கும் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

அடுத்த கட்டுரையில்
Show comments