Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

Mahendran
சனி, 22 மார்ச் 2025 (10:30 IST)
ஊழல் மற்றும் கொலைகளை மறைக்கவே மறுசீரமைப்பு என்னும் மெகா நாடகம் நடத்தப்படுவதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதனை எதிர்த்து, கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படும் முதல்வர் ஸ்டாலினை கண்டித்து, இன்று தமிழக பாஜக சார்பில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 
 
அதன்படி, இன்று காலை 10 மணிக்கு, தமிழக பாஜகவினர் அவரவர் வீட்டின் முன்பு, தமிழகத்தில் தொடர்ந்து வஞ்சித்து வரும் முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து, கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
சென்னையில், பனையூரில் உள்ள அண்ணாமலையின் இல்லத்தின் வெளியே, அவர் தனது ஆதரவாளர்களுடன் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது,   "தமிழகத்தில் கொலை, கொள்ளை, ஊழல் ஆகியவற்றை மறைக்கவே இந்த மறுசீரமைப்பு மெகா நாடகம் நடத்தப்படுகிறது" என்ற பதாகையை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறினார். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

20லி குடிநீர் கேன்களை 50 முறைகளுக்கு பயன்படுத்தினால்... உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை..!

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

ஸ்டாலின் கூட்டும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு..மம்தா பானர்ஜி புறக்கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments