Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரிசோதனை கட்டணம் பாதிக்கும் மேல் குறைப்பு: தமிழக அரசு ஆணை!

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (18:21 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்தது என்பதும் இதனை அடுத்து மார்ச் மாதம் முதல் ஏழு மாதங்கள் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது என்பதும் தெரிந்ததே
 
கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது என்பதும், தற்போது தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இயல்பு நிலை திரும்பி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் பரிசோதனை கட்டணம் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பது தெரிந்ததே
 
தனியார் ஆய்வகங்களில் கொரனோ பரிசோதனைக்காக ரூபாய் 3000 கட்டணம் நியமனம் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அண்டை மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கான கட்டணம் வெகுவாகக் குறைந்து உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 3000 இருந்து வருவதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டின
 
இதனை அடுத்து தற்போது தனியார் ஆய்வகங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கான கட்டணம் ரூபாய் 3000ல் இருந்து 1200 ஆக குறைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதாவது பாதிக்குமேல் கொரோனா வைரஸ் பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல்வரின் விரிவான காப்பீட்டு அட்டை வைத்திருந்தால் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூபாய் 800 மட்டுமே என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments