Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று தடுப்பூசி ஒத்திகை: சென்னையில் மத்திய அமைச்சர் ஆய்வு!

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2021 (07:54 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஒன்பது மாதங்களாக கொரோனா வைரஸ் பொது மக்களை ஆட்டிப் படைத்து வரும் நிலையில் இந்த வைரசுக்கு முடிவு கட்டும் வகையில் பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு முடிவு செய்தது
 
இதனை அடுத்து தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. குறிப்பாக தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தமிழகம் முழுவதும் 190 இடங்களில் இந்த தடுப்பூசி ஒத்திகை நடைபெறுவதாகவும் சென்னையில் நடைபெறும் தடுப்பூசி ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு செய்வதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
நாடு முழுவதும் உள்ள 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பூசி ஒத்திகை வெற்றிகரமாக முடிந்தால் இதனை அடுத்து பொதுமக்களுக்கு படிப்படியாக தடுப்பூசி போடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments