Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா... 6 நாட்களில் நடந்தது என்ன??

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (09:48 IST)
தமிழகத்தில் ஆறே நாட்களில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பானது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,761 லிருந்து 7,447 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 206 லிருந்து 239 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 516 லிருந்து 643 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,514 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 911 பேரும், டெல்லியில் 903 பேரும், ராஜஸ்தானில் 553 பேரும், தெலுங்கானாவில் 473 பேரும், கேரளாவில் 364 பேரும், ஆந்திராவில் 363 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் தமிழகத்தில் ஆறே நாட்களில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பானது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த புள்ளி விவரங்களுடன் கூடிய விரிவான பார்வை இதோ... 
 
கடந்த மார்ச் 29 ஆம் தேதி தான் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50-ஐ எட்டியது, மார்ச் 30 ஆம் தேதி 67 ஆக் அதிகரித்த எண்ணிக்கை அடுத்தடுத்த நாட்களில் வேகமெடுத்தது. 
 
ஆம், மார்ச் 31 ஆம் தேதி 124, ஏப்ரல் 1 ஆம் தேதி 234, ஏப்ரல் 2 ஆம் தேதி 309, ஏப்ரல் 3 ஆம் தேதி 411, ஏப்ரல் 4 ஆம் தேதி 485, ஏப்ரல் 5 ஆம் தேதி 571, ஏப்ரல் 6 ஆம் தேதி 621, ஏப்ரல் 7 ஆம் தேதி 690, ஏப்ரல் 8 ஆம் தேதி 738, ஏப்ரல் 9 ஆம் தேதி 834 என தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 911 ஆக உள்ளது. 
 
இந்நிலை இப்படியே நீட்டித்தால் அரசு கடும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

ரிசல்ட்டுக்கு முன்பாக தமிழகம் வரும் பிரதமர் மோடி! குமரியில் தியானத்தில் ஆழ்கிறார்?

அரசு வேலை வாங்கித் தருகிறேன்.! தாசில்தார் என கூறி பல லட்சம் மோசடி.! கார் ஓட்டுநர் கைது..!!

காதலிக்கு இறுதிச்சடங்கு செய்ய காசில்லை.. பிணத்தை சாலையில் போட்டு சென்ற லிவ்-இன் காதலன்!

ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு ஒத்திவைப்பு..! மே 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம்..!

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments