Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பு ரூ. 500 கோடி ஒதுக்கீடு - தமிழக முதல்வர் !

Webdunia
திங்கள், 23 மார்ச் 2020 (14:28 IST)
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 350 ஐ நெருங்குகிறது. இதில் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக இருந்த நிலையில் இப்போது மேலும் இருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ‘இதில் முதல் நபர் கலிபோர்னியாவிலிருந்து வந்த 64 வயது பெண்மணி ஆவார். தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொருவர் துபாயிலிருந்து திரும்பிய 43 வயது நபர் ஆவார். இவர் நெல்லை அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் இரண்டு பேரின் உடல்நிலையும் சீராக இருக்கிறது’ என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை மத்திய அரசு தேசியப் பேரிடராக அறிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா  வைரஸ் பரவல் பாதிக்கப்பட்டுள்ள நகர்ப்புற மற்றும் கிராமம்புற மக்களுக்கு அடிப்படை சேவைகள் வழங்குகின்ற உள்ளாட்சி அமைப்புகள், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர பகுதிகளுக்கு ரூ. 1629 கோடியும், ஊரகப் பகுதிகளுக்கு ரூ.940 கோடியும், ஒதுக்கப்பட்டுள்ளது.  இதுதவிர மாநிலங்கள் வாரியாகவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்திற்கு ரூ.987.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நவடிக்கைகளுக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய முதல்வர், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசின் அறிவுரைகளை  அரௌ மற்றும் தனியார் துறையினர் கடைப்பிடிக்க வேண்டும் என கூறினார்.

மேலும், கொரோனாவால் ஒரு உயிர் போக அனுமதிக்க மாட்டோம், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்தார்.  அப்போது, கொரோனாவை தடுக்க ஏற்கனவே ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார். இந்த சட்டசபைக் கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments