Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 22 ... சென்னையில் அதிகரிக்கும் கொரோனா மரணம்!!

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (12:46 IST)
சென்னையில் இன்று ஒரு நாளில் இதுவரை கொரோனாவுக்கு 22 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை மாநகராட்சி வெளியிட்ட தகவலின் அடிப்படையில் சென்னையின் 15 மண்டலங்களிலும் சேர்த்து மொத்தம் 33,244 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 5,364 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து தேனாம்பேட்டை மண்டலத்தில் இதுவரை 4,031 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
மேலும் தண்டையார்பேட்டை மண்டலத்தில் 4226 பேர்களும், அண்ணாநகர் மண்டலத்தில் 3330 பேர்களும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 3539 பேர்களும், திருவிக நகரில் 2992 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில்சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனவுக்கு 22 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது நேற்றும் இன்றும் 44 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments