Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளுக்கு நாள் அதிகரிக்கும் சமையல் எண்ணெய் விலை! – அதிர்ச்சியில் மக்கள்!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (11:17 IST)
உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் அதிகளவில் சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் சூரியகாந்தி எண்ணெய் தேவையில் 80 சதவீதம் உக்ரைனில் இருந்தே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் போர் தொடங்கியுள்ளதால் சூரியகாந்தி எண்ணெய் விலை ரூ.50 வரை விலை உயர்ந்துள்ளது. மற்ற எண்ணெய் விலைகளும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.

முன்னதாக ஒரு லிட்டர் நல்லெண்ணெய் ரூ.230லிருந்து ரூ.280ஆக விற்கப்படுகிறது. கடலெண்ணெய் ரூ.150லிருந்து உயர்ந்து ரூ.170 ஆக விற்பனையாகி வருகிறது. பாமாயில் ரூ.125லிருந்து உயர்ந்து ரூ.175க்கு விற்பனையாகி வருகிறது. சமையல் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது இல்லத்தரசிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments