அம்பேத்கர் குறித்த அமித்ஷா உரையை நீக்க எக்ஸ் நிறுவனம் மறுப்பு.. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்..!

Mahendran
வெள்ளி, 20 டிசம்பர் 2024 (09:57 IST)
அம்பேத்கர் குறித்த அமித்ஷா உரையை எக்ஸ் தளத்திலிருந்து நீக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் அதற்கு எக்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்து விட்டதாகவும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில், அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமித்ஷா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர் பதவி விலக வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய போது, அமித்ஷா உரையின் வீடியோ பதிவை நீக்குமாறு பாஜக அரசு எக்ஸ் நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டதாகவும், இது குறித்து கருத்து தெரிவிக்க காங்கிரஸ் தலைவர்களுக்கு மின்னஞ்சல் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆனால், பேச்சு சுதந்திரத்தை காரணம் காட்டி மத்திய அரசின் இந்த கோரிக்கையை எக்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.




Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments