Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேங்காய் பொறுக்குவதில் தகராறு : நல்லசாமி என்ன செய்தார் தெரியுமா..?

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (18:57 IST)
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள கொன்னமரத்து அம்மன் கோயிலில்  காவலாளியாக பணியாற்றுபவர்   வடிவேல் (50). இவரது நண்பர் கந்தசாமியும்  கோயிலில் படுத்து உறங்கிவிட்டு பகலில் வியாபாரத்திற்காக வெளியே சென்று விடுவார். 
நேற்று மாலையில் கோயிலுக்கு வந்த நல்லசாமி கோயிலில் சாமிக்கு உடைத்த சிதறு தேங்காயை பொறுக்க முற்பட்டார், ஆனால் ஏற்கனவே அங்கிருந்த வடிவேலும் , கந்தசாமியும் தேங்காயை பொறுக்க வேண்டாம் என தடுத்ததாக தெரிகிறது. கீழே கிடந்த கட்டையால் அவர்களை தாக்கிவிட்டு ஓடிவட்டார்.
 
பிறகு ஆத்தாம் பாளையத்திற்கு சென்ற  சேர்ந்த நல்லசாமி அதே ஊரில் வசிக்கும் குமார் என்பவரிடம் 200 ரூபாய் கேட்டு தகராறு செய்ததுடன் , தன் கையில் வைத்திருந்த கத்தியால் கத்தியால் அவரை குத்திவிட்டு ஓடிவிட்டார்.
 
அப்போது பொதுமக்கள் அவரை சேர்ந்து பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
 
பின் போலிஸாரிடம் அவர் கூறியதவது:
 
நான் தேங்காய் பொறுக்கும் போது கோயிலில் இருந்த இருவரும் என்னை தடுத்தனர், அதனால் ஆத்திரத்தால் அவர்களை அருகில் இருந்த கட்டையால் அடித்தே இருவரையும் கொன்று விட்டேன். 
 
அதனால் ஊரிலிருந்தால் போலீஸ் பிடித்துவிடுவார்கள் என்பதால் என் ஆத்தாம் பாளையத்திலிருந்து கிளம்பி செல்வபதற்கு தயாரானேன். ஆனால் கையில் காசு இல்லாததால் குமார் என்பவரிடம் 200 ரூபாய் பணம் கேட்டேன் ஆனால் அவர் தர மறுக்கவே கையில் இருந்த கத்தியால் அவரை குத்திவிட்டு ஓடினேன். ஆனால் மக்கள் பிடித்து விட்டார்கள். இவ்வாறு அவர் கூறினதாக போலீஸார் தெரிவித்தனர்.
 
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments