Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நள்ளிரவு முதல் மழை.. தட்பவெப்பம் மாறியதால் மக்கள் மகிழ்ச்சி..!

Siva
செவ்வாய், 8 அக்டோபர் 2024 (06:58 IST)
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை மழை பெய்து கொண்டிருந்ததை அடுத்து, சென்னை முழுவதும் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை மாறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை இந்த மாதம் இரண்டாவது வாரம் தொடங்க இருக்கும் நிலையில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று இரவு முதல் சென்னையில் மிதமான மழை பெய்தது. கோயம்பேடு, வடபழனி, அடையாறு, தரமணி, மந்தைவெளி, வேளச்சேரி, பட்டினம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் கன மழை பெய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு அதிகாலை வரை மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான காற்றின் நிலை மாறியுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் கடுமையான வெயில் கொளுத்திய நிலையில், தற்போது குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை மாறியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இன்னும் மழை அதிகமாக பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் கொடுத்து ஆடையின்றி ஆண்களை புகைப்படம் எடுத்த பெண்.. இளைஞர்கள் புகார்..!

முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் கைது.. ஜாமின் நிபந்தனையை மீறினாரா?

இந்தியன் வங்கி தேர்வு எழுத வெளி மாநிலங்களில் தேர்வு மையம்: சு வெங்கடேசன் எம்பி கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: துபாய் செல்லும் தனிப்படை போலீஸ்.. என்ன காரணம்?

இன்று தான் பள்ளி திறப்பு.. அதற்குள் 13ஆம் தேதி வரை விடுமுறை அளித்த சென்னை பள்ளி..!

அடுத்த கட்டுரையில்
Show comments