Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரும் பட்டாசு ஆலை வெடிவிபத்து..! 5 பெண்கள் உள்பட 9 பேர் பலி..! தரைமட்டமான அறைகள்.!

Senthil Velan
சனி, 17 பிப்ரவரி 2024 (14:20 IST)
விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து 5 பெண்கள் 4 ஆண்கள் உள்ளிட்ட 9 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே முத்துசாமிபுரத்தில் விஜய் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென மருந்துகள் வெடித்து சித்தறியதாக சொல்லப்படுகிறது.
 
இதில் 5 அறைகள் தரைமட்டமாகின. இந்த வெடிவிபத்தில் அங்கு பணியில் இருந்த 5 பெண் தொழிலாளர்கள் மற்றும் 4 ஆண் தொழிலாளர்கள் உட்பட 9 பேர் பலியாகியுள்ளனர்.
 
மேலும் பத்துக்கு மேற்பட்டோர்  படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ALSO READ: விவசாயி சின்னத்தை திரும்ப பெறுவோம்..! நீதிமன்றத்தை நாட உள்ளோம்..! சீமான்..

இந்த சம்பவம் அறிந்த சிவாசி மற்றும் சாத்தூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெடி விபத்து குறித்து வெம்பகோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விபச்சார விடுதி நடத்திய பெண்ணுக்கு உதவி.. 2 காவலர்கள் சஸ்பெண்ட்..!

முட்டை சாப்பிட மாட்டோம்.. டிசி கேட்டு பயமுறுத்தும் 80 மாணவர்கள்.. பள்ளியில் பரபரப்பு..!

மனைவியுடன் சண்டை.. பெற்ற மகளை கழுத்தறுத்து கொன்ற கணவன்! - சென்னையில் அதிர்ச்சி

அனில் அம்பானி வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை.. என்ன காரணம்?

சோனியா காந்தி தலைமையில் திடீர் ஆர்ப்பாட்டம்.. ஸ்தம்பித்த நாடாளுமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments