வசந்தகுமார் இடத்தில் யார் ? – திமுக, காங்கிரஸ் இடையே போட்டி !

Webdunia
புதன், 29 மே 2019 (13:42 IST)
மக்களவைத் தேர்தலில் வென்றதை அடுத்து நாங்குனேரித் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் வசந்தகுமார்.

மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வென்ற காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் தான் வகித்த நாங்குநேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் அவரின் தொகுதியான நாங்குனேரியில் அடுத்ததாக போட்டியிடப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்தத் தொகுதி மீண்டும் காங்கிரஸுக்குக் கொடுக்கப்படுமா அல்லது திமுக போட்டியிடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ராஜினாமா செய்ததை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வசந்தகுமார் ‘ நாங்குனேரியில் அடுத்ததாக போட்டியிடுவது யார் என்று காங்கிரஸ் தலைமையும் திமுக வும் சேர்ந்து முடிவெடுக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாங்குனேரி தொகுதியில் காங்கிரஸின் பேச்சாளர் பீட்டர் அல்போன்ஸ் போட்டியிட விரும்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு திமுக சம்மதம் தெரிவிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நடந்து முடிந்த இடைத்தேர்தலில் கூட திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்காமல் தானே அனைத்துத் தொகுதிகளிலும் களமிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments