Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக சகவாசம் பெரும் நாசம்னு புரிஞ்சிப்பீங்க! – ஜோதிமணி எம்.பி கண்டனம்!!

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2020 (14:02 IST)
தமிழக அரசின் உத்தரவை மீறி பாஜக வேல் யாத்திரை நடத்துவது குறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜக சார்பில் வேல் யாத்திரை நடத்துவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக அனுமதி அளிக்க மறுத்தது தமிழக அரசு. இந்நிலையில் திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் சென்னையிலிருந்து காரில் திருத்தணி கிளம்பி சென்ற பாஜக தமிழக தலைவர் எல்.முருகனுக்கு திருத்தணி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்க்கட்சி தலைவர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி “அடிமை அதிமுக பிஜேபிக்கு பயந்து வேல் யாத்திரைக்கு அனுமதி அளித்துள்ளது. தொடர்ந்து தமிழக மக்களுக்கு பிஜேபி இழைக்கும் துரோகங்களுக்குத் துணைநிற்கிறது. ஒன்றுமேயில்லாத பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்த கட்சிகள் அழிந்ததுதான் வரலாறு. உதாரனம் AGP,JDS, SAD,PDP. அதிமுகவும் அப்பட்டியலில் சேரும்” என்று தெரிவித்துள்ளார்.

பாஜக அரசின் வேல் யாத்திரை குறித்து பேசியுள்ள தமிழக முதல்வர் “சட்டம் தன் கடமையை செய்யும்” என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments