Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை அடிக்கப் பாய்ந்தாரா நிர்வாகி?

Webdunia
ஞாயிறு, 18 அக்டோபர் 2020 (08:26 IST)
கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை அதிமுக அதிமுக ஒன்றியச் செயலாளர் ஒருவர் அடிக்க பாய்ந்ததாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கரூர் மாவட்டம் வேடசந்தூர் அருகே சிட்கோ அமையவுள்ள இடத்தை பார்வையிட கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வருகை தந்திருந்தார். அப்போது அங்கு அதிமுக ஒன்றியச் செயலாளர் மலர்மன்னனும் வந்ததாக தெரிகிறது
 
இந்த நிலையில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் ஒரு கட்டத்தில்பெண் எம்.பி. என்றும் பாராமல் தோள்களை திமிறிக்கொண்டு அடிப்பது போல் அதிமுக நிர்வாகி மலர்மன்னன் வந்ததாகவும் கூறப்படுகிறது.
 
அதிமுக ஒன்றியச் செயலாளர் மலர்மன்னன் செயலால் ஆர்.கோம்பை கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கிராமத்து மக்கள் காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments