Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கி தோட்டாவுடன் விமான நிலையத்துக்கு வந்த காங்கிரஸ் பிரமுகர்! அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (17:43 IST)
சென்னையில் இருந்து கோவை செல்ல வந்த மயூரா ஜெயக்குமார் துப்பாக்கி தோட்டாக்களுடன் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் இருந்து கோயம்புத்தூர் செல்வதற்காக இன்று அதிகாலை வந்தார். அப்போது அவரது சூட்கேஸை சோதனை செய்த போது அதில் 17 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன. இதனால் அவர் விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

பிஸ்டல் வைத்திருக்க உரிமம் பெற்றுள்ளதாக மயூரா ஜெயக்குமார் கூறிய நிலையில் தோட்டாக்களை பறிமுதல் செய்து அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் அதிகாரிகள். இச்சம்பவமானது விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments