Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கி தோட்டாவுடன் விமான நிலையத்துக்கு வந்த காங்கிரஸ் பிரமுகர்! அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (17:43 IST)
சென்னையில் இருந்து கோவை செல்ல வந்த மயூரா ஜெயக்குமார் துப்பாக்கி தோட்டாக்களுடன் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் இருந்து கோயம்புத்தூர் செல்வதற்காக இன்று அதிகாலை வந்தார். அப்போது அவரது சூட்கேஸை சோதனை செய்த போது அதில் 17 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன. இதனால் அவர் விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

பிஸ்டல் வைத்திருக்க உரிமம் பெற்றுள்ளதாக மயூரா ஜெயக்குமார் கூறிய நிலையில் தோட்டாக்களை பறிமுதல் செய்து அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் அதிகாரிகள். இச்சம்பவமானது விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments