சசிகலாவின் சொத்துக்கள் பறிமுதல்: நடவடிக்கையை தொடங்கியது தமிழக அரசு!

சசிகலாவின் சொத்துக்கள் பறிமுதல்: நடவடிக்கையை தொடங்கியது தமிழக அரசு!

Webdunia
செவ்வாய், 30 மே 2017 (10:24 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இல்லாததால் அவருக்கான தண்டனையில் இருந்து விடுப்பு அளித்தனர்.


 
 
இந்த வழக்கில் அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா, சசிகலாவின் 128 சொத்துக்களில் 68 சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.
 
அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் சொந்த மான 68 சொத்துகளை கைப்பற்றுமாறு தமிழக அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை தொடங்குமாறு 6 மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் கடிதம் எழுதியுள்ளது. அதன் நகலை மாநில கண்காணிப்பு ஆணையருக்கும் அனுப்பியிருக்கிறது. பறிமுதல் செய்யப்பட உள்ள ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரின் 68 சொத்துகளின் இன்றைய மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சொத்துக்களை கைப்பற்ற ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டமன்ற தேர்தலுக்கு முன் வரும் ராஜ்யசபா தேர்தல்.. தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பது யார்?

அதிமுக இடத்தை விஜய் பிடித்துவிடுவாரா? மீண்டும் திமுக ஆட்சியா? அரசியல் விமர்சகர்களின் கணிப்பு..!

விஜய்யின் தவெக 20 தொகுதிகளில் தான் வெற்றி பெறுமா? அதிமுக, திமுகவின் நிலை என்ன?

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அண்ணாமலை கம்முனு இருக்கணும்.. தலைவருக்கு தெரியும்!.. தவெக பதிலடி!...

அடுத்த கட்டுரையில்
Show comments