சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்-.! கோவை நீதிமன்றம் உத்தரவு.!!

Senthil Velan
வெள்ளி, 26 ஜூலை 2024 (16:33 IST)
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கருக்கு கோவை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் யுடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த யுடியூபர் சவுக்கு சங்கர்,  பெண் போலீசார் குறித்து தரக்குறைவாக பேசி இருந்தார். இது தொடர்பாக பெண் போலீசார் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை பேட்டி எடுத்த பெலிக்ஸ் ஜெரால்டையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 
 
இதனைத்தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் அதிரடியாக போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும்  கஞ்சா வைத்திருந்ததாக கூறி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  பல்வேறு மாவட்டங்களில் நீதிமன்றத்தின் மூலம் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். 
 
தற்போது ஒவ்வொரு நீதிமன்றத்திலும் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கிலும்  சவுக்கு சங்கருக்கு கோவை 4 வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதால் ஜாமின் கிடைத்தாலும் அவரால் வெளியே வர முடியாது.

ALSO READ: கமலா ஹாரிசுக்கு ஒபாமா ஆதரவு.! மிகச்சிறந்த அதிபராக செயல்படுவார் என நம்பிக்கை..!!

அனைத்து வழக்குகளில் இருந்தும் சவுக்கு சங்கருக்கு ஜாமின் கிடைத்தால் மட்டுமே அவரால் வெளியே வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments