Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதியின் மகள் கனிமொழி மீது காவல் நிலையத்தில் புகார்

Webdunia
புதன், 10 ஜனவரி 2018 (10:26 IST)
திருப்பதி ஏழுமலையான் சுவாமி கோவிலை இழிவுபடுத்தி பேசியதாக கனிமொழி எம்.பி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் நடைபெற்ற நாத்திகர்கள் மாநாட்டில் பேசிய கனிமொழி திருப்பதி ஏழுமலையான் சுவாமிக்கு சக்தி இருந்தால் எதற்கு காவல் எனக் கூறியுள்ளார். அவர் இவ்வாறு பேசியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் இந்து மக்கள் கட்சியினர், கனிமொழி கூறிய கருத்து, 150 கோடி இந்து மக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. ஒரு பொறுப்புள்ள எம்.பி இப்படி கருத்து தெரிவிக்கக் கூடாது எனவும் இந்துக்களின் மனதை புண்படுத்திய கனிமொழியை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரமாணிக்கம் சிவா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments