Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதியின் மகள் கனிமொழி மீது காவல் நிலையத்தில் புகார்

Webdunia
புதன், 10 ஜனவரி 2018 (10:26 IST)
திருப்பதி ஏழுமலையான் சுவாமி கோவிலை இழிவுபடுத்தி பேசியதாக கனிமொழி எம்.பி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் நடைபெற்ற நாத்திகர்கள் மாநாட்டில் பேசிய கனிமொழி திருப்பதி ஏழுமலையான் சுவாமிக்கு சக்தி இருந்தால் எதற்கு காவல் எனக் கூறியுள்ளார். அவர் இவ்வாறு பேசியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் இந்து மக்கள் கட்சியினர், கனிமொழி கூறிய கருத்து, 150 கோடி இந்து மக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. ஒரு பொறுப்புள்ள எம்.பி இப்படி கருத்து தெரிவிக்கக் கூடாது எனவும் இந்துக்களின் மனதை புண்படுத்திய கனிமொழியை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரமாணிக்கம் சிவா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 பேர் மர்ம மரணம்.. விஷம் வைக்கப்பட்டதா?

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதல்.. தமிழக அரசு தலையிட வேண்டும்: அன்புமணி..!

'வக்ஃப் வாரிய கூட்டுக்குழுவில் நடந்தது என்ன? இடைநீக்கம் செய்யப்பட்ட ஆ ராசா விளக்கம்..!

வக்ஃப் மசோதா கூட்டுக் குழுவில் இருந்து ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்..!

சிறையில் இருந்து தப்பி 34 ஆண்டுகள் கழித்து மீண்டும் சரணடைந்த கொலை குற்றவாளி.. விநோத சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments