Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக பிரமுகர் வீட்டு முன் வாக்குவாதம் செய்த திமுக எம் எல் ஏ – சிசிடிவியில் சிக்கிய காட்சிகள்!

Webdunia
புதன், 24 ஜூன் 2020 (08:25 IST)
மதுரையில் பாஜக பிரமுகரை தாக்க முயன்றதாக திமுக எம் எல் ஏ மூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி எம் எல் ஏ வாக இருப்பவர் மூர்த்தி. இவரை பற்றி பாஜக இளைஞர் அணி கோட்டப் பொறுப்பாளர் சங்கரபாண்டியன் என்பவர் சமூகவலைதளங்களில் தவறாக செய்திகள் பரப்பியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி சங்கரபாண்டியனின் வீட்டுக்கு முன் சென்று வாக்குவாதம் செய்ததாக சொல்லப்படுகிறது.

இந்த வாக்குவாதம் முற்றி மூர்த்தி சங்கரபாண்டியனையும் அவரது மனைவியையும் தாக்க முயற்சி செய்ததாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக வீட்டின் முன் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக காவல்துறையில் சங்கரபாண்டியன் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments