Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாணவியை சகோதரி என்று சொல்லி விடுதியில் தங்க வைத்த வாலிபர் கைது

மாணவியை சகோதரி என்று சொல்லி விடுதியில் தங்க வைத்த வாலிபர் கைது
, புதன், 10 டிசம்பர் 2014 (20:48 IST)
மாணவியை சகோதரி என்று விடுதிக்கு அழைத்துச் சென்ற மாணவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 
தட்சிண கன்னட மாவட்டம் சேர்ந்த ஸ்ரீதேவி (17) அங்குள்ள தனியார் ஜூனியர் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை ஸ்ரீதேவியிடம் தனது பெற்றோர் உன்னை பார்க்க வேண்டும் என்று கூறி வாலிபர் பவன்குமார் என்பவர் தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார். விடுதியில் அறை எடுக்கும் போது, பவன்குமார், ஸ்ரீதேவியை தனது சகோதரி என்றும், எனது குடும்பத்தினர் இங்கே வரவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
 
அதையடுத்து தங்கும் விடுதி அறையில் மாணவியுடன், அவர் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் பவன்குமாரின் பெற்றோர் யாரும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த தங்கும் விடுதி ஊழியர்கள் சம்பவம் குறித்து, உப்பினங்கடி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
 
 உடனே காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஸ்ரீதேவி, பவன்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் மாணவி ஸ்ரீதேவியை காவல் துறையினர் எச்சரிக்கை செய்து வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.
 
மேலும் மாணவியை பொய்யான தகவல் கூறி தங்கும் விடுதிக்கு அழைத்து வந்த பவன்குமாரை கைது செய்தனர். இது குறித்து உப்பினங்கடி காவல் துறையினர்  வழக்குப்பதிவு செய்து கைதான பவன்குமாரிடம் விசாரித்து வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil