Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு.. 20 வயதில் சோகம்..!

Mahendran
திங்கள், 17 மார்ச் 2025 (13:27 IST)
சென்னையில் மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து, கல்லூரி மாணவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னையின் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மின்சார ரயிலில், தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், ஏராளமானோர் மின்சார ரயிலைப் பயன்படுத்துகின்றனர். எனவே, காலை மற்றும் மாலை நேரங்களில் மின்சார ரயிலில் கூட்டம் மிக அதிகமாக இருக்கும்.
 
இந்த நிலையில், இன்று காலை தாம்பரம் அருகே, காஞ்சிபுரம் மாவட்டம் ஆர்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஸ்வா என்ற கல்லூரி மாணவர் மின்சார ரயிலில் பயணம் செய்தார். அப்போது, அவர் திடீரென மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்தார். உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, அவரை பரிசோதித்தபோது, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தது தெளிவாகியது.
 
மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரியில் படித்து வந்த இவர், தினமும் மின்சார ரயிலில் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். ஆனால், இன்று ஏற்பட்ட இந்த சோகம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். இதனால், அவரது குடும்பத்தினர் துயரத்தில் மிதந்து, கதறி அழும் காட்சி அனைவரின் கண்களில் கண்ணீர் வரவழைத்தது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 வருடங்களாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. 59 வயது ஆசிரியர் கைது..!

டாஸ்மாக் ஊழலை கண்டித்து பா.ஜ.க நடத்தும் போராட்டம்: திருமாவளவன் வரவேற்பு..!

மர்ம உறுப்பில் தங்கத்தை வைத்து கடத்தினார் ரன்யா ராவ்.. பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

சந்திராயான்5 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி: இஸ்ரோ தலைவர் விளக்கம்

4 ஆண்டுகளாக மடிக்கணினி வழங்கவில்லை.. ஈபிஎஸ்: நிறுத்தியதே நீங்கள் தான்: முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments