Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கழிவறைக்குள் குழந்தை பெற்ற கல்லூரி மாணவி; பிறந்த குழந்தை மரணம்

கழிவறைக்குள் குழந்தை பெற்ற கல்லூரி மாணவி; பிறந்த குழந்தை மரணம்
, வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (14:52 IST)
சேலம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் கர்ப்பமானது யாருக்கும் தெரியாததால் பெட்ரோல் பங்க் கழிவறையில் பிரசவம் பார்த்துள்ளார்.
 
சேலம் ஆத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்றுவரும் 3ஆம் ஆண்டு மாணவி ஒருவர் கடந்த 3 நாட்களுக்கு முன் கல்லூரி சுற்றுலாவாக சகமாணவிகளுடன் கேரளாவுக்கு வந்துள்ளார். பல்வேறு  பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டு நேற்று முன்தினம் சக மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுடன் பேருந்தில் கோவை வந்து கொண்டிருந்துள்ளார்.
 
இந்நிலையில், வாளையாரை அடுத்து நவக்கரை அருகே வந்தபோது மாணவி வயிற்று வலி ஏற்படுவதாக கூறியுள்ளார். இதனால், நவக்கரை அருகில் உள்ள பெட்ரோல் பங்க் முன் பஸ் நிறுத்தப்பட்டது.
 
உடனே பெட்ரோல் பங்க் வளாகத்தில் உள்ள கழிவறைக்குள் சென்ற மாணவி அலறி கத்தியுள்ளார். அப்போது பேராசிரியர்களும், மாணவிகளும் சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி கிடந்துள்ளார்.
 
அருகே தொப்புள் கொடி துண்டிக்கப்படாத நிலையில் பெண் சிசு சுய நினைவின்றி கிடந்தது. இதுகுறித்து கந்தேகவுண்டன் சாவடி காவல் துறையினருக்கும், 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இருவரையும் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். டாக்டர்கள் பரிசோதித்த போது குழந்தை இறந்தது தெரியவந்துள்ளது. இதுபற்றி, செல்வியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
 
இது குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவருக்கும் தனியார் கல்லூரியில் எழுத்தாளராக பணியாற்றும் ராஜசேகர் (28) என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. மேலும், இருவரும் தனிமையில் சந்தித்து உறவு கொண்டதால் மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார்.
 
ஆனால், பெற்றோர் மற்றும் கல்லூரியில் பயில்பவர்களிடம் வயிற்றில் நீர் கட்டி இருக்கிறது எனக்கூறி சமாளித்து வந்துள்ளார். இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil