Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடரும் தற்கொலை : கோவை அருகே கல்லூரி கிணற்றில் மாணவி பிணம் மீட்பு

தொடரும் தற்கொலை : கோவை அருகே கல்லூரி கிணற்றில் மாணவி பிணம் மீட்பு
, புதன், 3 பிப்ரவரி 2016 (14:40 IST)
கோவை அருகே கல்லூரி கிணற்றில், ஒரு மாணவியின் சடலம் மீட்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சின்ன சேலத்தில் செயல்பட்டு வந்த சித்த மருத்துவ கல்லூரில் மூன்று மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியிலிருந்து தமிழகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் மற்றொரு மாணவியின் சடலம் அவர் படிக்கும் கல்லூரி வளாகத்திலுள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
 
கோவை அருகே உள்ள மேட்டுப்பாளையத்தில் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் உள்ள ஒரு கிணற்றிலிருந்து இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 
விசாரணையில், அவரின் பெயர் திவ்யா என்பது தெரியவந்துள்ளது. அவரின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்று காவல் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
 
கல்லூரி வளாகத்திலேயே மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வரும் வேளையில், இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil