Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரிந்த குளத்தின் கரை நெடுஞ்சாலை துறை சார்பில் சீரமைப்பு!

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2023 (12:53 IST)
கனமழையால் சரிந்த குளத்தின் கரை நெடுஞ்சாலை துறை சார்பில் சீரமைப்பு கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.


நாகை மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுகுதிகளை கூடுதல் தலைமைச் செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ரமேஷ் சந்த் மீனா, ஆட்சியர் ஜானிடாம்வர்கீஸ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி,மீனம்ப நல்லூர், தலைஞாயிறு என 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்‌. அதன் ஒரு பகுதியாக  திருக்குவளை -எட்டுக்குடி பிரதான சாலையில் தொடர் கனமழை  காரணமாக பிள்ளையார் கோயில் குளம் மண் சரிவு ஏற்பட்டது.

நிலையில் உடனடியாக பேரிடர் கால  பராமரிப்பு பணி  நெடுஞ்சாலை துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது.அதாவது குளத்தின் கரையை மண் மூட்டை கொண்டு அடுக்கி பலப்படுத்தி துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனை கூடுதல் தலைமைச் செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ரமேஷ் சந்த் மீனா, ஆட்சியர் ஜானிடாம்வர்கீஸ், கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி,வட்டாட்சியர் சுதர்சன், நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் எம்.நாகராஜன்,உதவி பொறியாளர் அ‌.உமாமகேஸ்வரி, சாலை ஆய்வாளர் ஜி.ரமேஷ்குமார் சாலை பணியாளர்கள்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments