Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை கலவர வழக்கு: 10ஆண்டுகளுக்கு பிறகு திருச்சி சிறை ‘ஹவுஸ்ஃபுல்’

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2016 (17:04 IST)
கோவை கலவர வழக்கில் கைதானவர்களை அடைத்து வைக்க, திருச்சி மத்திய சிறையில் இடமில்லாததை அடுத்து, 40க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டனர்.
 

 
கோவையில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்ட 222 பேர் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் நேற்று மதியம் வரை 191 பேர் திருச்சி சிறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
 
இவர்களை அடைத்ததால், திருச்சி சிறையில் தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பின. விசாரணைக் கைதிகளுக்கான கட்டிடங்களில் போதிய அளவு இடமில்லாததால், சிறை மருத்துவமனை பிளாக்குகளிலும் ஏராளமான கைதிகளை அடைத்துள்ளனர்.
 
அதன்பிறகு கொண்டுவரப்பட்ட 40-க்கும் மேற்பட்ட கைதிகளை வைக்க இடம் இல்லாததால், புதுக்கோட்டை கிளை சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் திருச்சி சிறை முழுமையாக நிரம்பியுள்ளதாக சிறை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments