Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கை மீறி குவிந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் – விரட்டியடித்த போலீஸார்!

Webdunia
சனி, 28 மார்ச் 2020 (13:51 IST)
தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கோயம்புத்தூரில் வடமாநில தொழிலாளர்கள் பலர் சாலைகளில் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு தீவிர காவல் கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அவசியமின்றி சாலைகளில் சுற்றி திரிவோர் மீது போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூரில் வேலைக்காக வந்து தங்கியுள்ள வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளிகள் போராட்டம் நடத்த முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட மாநிலங்களிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு வந்துள்ள மக்கள் தற்போது ஊரடங்கு உத்தரவால் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாத நிலை உள்ளது. தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் உணவு, தங்குமிடம் உள்ளிட்டவற்றிற்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறி அவர்கள் கோவை சுந்தராபுரம் பகுதி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உடனடியாக அங்கு விரைந்த போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த 100க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவம் கோவை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments