Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செத்துடலாம் போல இருக்கு சார்..! – அமித்ஷாவிடம் கதறிய இளைஞர்!

Webdunia
சனி, 28 மார்ச் 2020 (11:30 IST)
ஊரடங்கு உத்தரவால் கோயம்புத்தூரில் சிக்கி கொண்ட நபர் தற்கொலை செய்து கொள்ள தோன்றுவதாக அமித்ஷாவிடம் உதவி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோயம்புத்தூரில் பணி புரிந்து வந்திருக்கிறார். நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் எல்லைகள் மூடப்பட்டதால் சொந்த ஊருக்கு செல்ல முடியாத இளைஞர் தனது அறையிலேயே அடைந்து கிடந்திருக்கிறார். தனியாக இருப்பது மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும், தற்கொலை செய்து கொள்ள தூண்டுவதாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டேக் செய்து ட்விட்டரில் உதவி கேட்டுள்ளார் அந்த இளைஞர்.

இதுகுறித்து அறிந்த கோயம்புத்தூர் காவல் ஆணையர் அந்த இளைஞருக்கு சாலைகளில் தடையை மீறி வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கு பணியை அளித்திருக்கிறார். ஆனால் அந்த இளைஞர் தனது சொந்த ஊருக்கு போவதையே விரும்பியதால் பிறகு இருசக்கர வாகனம் மூலமாக அவர் தனது சொந்த ஊருக்கு செல்ல போலீஸார் உதவியதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments