Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் திறப்பு!!

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2023 (12:41 IST)
கோவையின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் கோவை குற்றாலத்தில் ஏற்பட்டு இருந்த வெள்ளப் பெருக்கின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது.


தற்பொழுது நீர்வரத்து குறைந்ததால் மீண்டும் திறக்கப்படுவதாக  வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர். கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக பூண்டி, வெள்ளியங்கிரி, கோவை குற்றாலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வந்தது. இதனால்   நீரின் வரத்து அதிகமாகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் தற்போது நீரின் வரத்து குறைந்து இயல்பான நிலைக்கு திரும்பியது. இதனால்  மீண்டும் இன்று முதல் திறக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments