Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை கல்லூரி மாணவர் திடீர் மரணம்.. பரோட்டா சாப்பிட்டது தான் காரணமா?

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (14:10 IST)
கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று இரவு தனது நண்பர்களுடன் பரோட்டா சாப்பிட்டு விட்டு தூங்கிய நிலையில் திடீரென அவர் இன்று காலை மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

கோவை சூலூர் என்ற பகுதி அருகே தனியார் கல்லூரியில் திருப்பூரைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் என்ற 18 வயது மாணவர் படித்து வருகிறார். இன்று காலை அவர் திடீரென தனது அறையில் சடலமாக இருந்ததால் சக மாணவர்கள் கூட பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இதையடுத்து அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்த நிலையில் தூக்கத்திலேயே ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. நேற்று இரவு கல்லூரி மாணவர் ஹேமச்சந்திரன் தனது நண்பர்களுடன் பரோட்டா சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றதாகவும் தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது.

 இந்த நிலையில் மாணவனின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனையின் முடிவில் தான் அவர் பரோட்டா சாப்பிட்டதால் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியவரும்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments