Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியாணி போட்டி நடத்திய தனியார் உணவகத்தின் மீது வழக்கு பதிவு.. போலீசார் அதிரடி..!

Siva
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (07:24 IST)
கோவையில் முன் அனுமதி இன்றி பிரியாணி போட்டி நடத்திய தனியார் உணவகத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
கோவையில் ரயில் நிலையம் அருகே உள்ள போச்சே ஃபுட் எக்ஸ்பிரஸ் கடந்த புதன்கிழமை பிரியாணி போட்டியை நடத்தியது. 6 பிரியாணி சாப்பிட்டால் ரூ.1 லட்சம் பரிசு என விளம்பரம் செய்யப்பட்டது.
 
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக கேரளாவில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குவிந்த கட்டுங்கடங்காத கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும், அந்த பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது.
 
இந்த புகாரின் அடிப்படையில் பிரியாணி போட்டி நடத்திய தனியார் உணவகத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி சம்பவத்தன்று நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது போலீசார் அபராதம் விதித்தனர்.
 
இந்த பிரியாணி போட்டியில் 2ஆ,  இடம் பிடித்த கணேஷ மூர்த்தி தனது ஆட்டிசம் குறைபாடு உள்ள மகனின் மருத்துவ செலவுக்காக இந்த போட்டியில் கலந்து கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments