Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாவூத் இப்ராஹிமுக்கு மரண அடி கொடுத்த தமிழர்

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (06:00 IST)
போதை பொருள் வியாபாரம் என்பது உலக அளவில் இருந்தாலும் இதுவரை மிகப்பெரிய அளவில் போதை பொருட்கள் பிடிபடாததே அவர்களின் வெற்றியாக இருந்தது.



 
 
அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுசிறு அளவில் போதை பொருட்கள் பிடிபடுவதும், அதை கடத்தி வந்த அப்பாவிகள் கைது செய்யப்படுவதுமாக இருந்த நிலையில் முதல்முறையாக ரூ.35000 கோடி அளவில் போதை பொருள் பிடிபட்டுள்ளது. இதை பிடிக்க காரணமாக இருந்தவர் கடலோரக் காவல்படை மேற்கு பிராந்தியத்தின் தலைவராக இருக்கும் நடராஜன் கிருஷ்ணசாமி. இவர் ஒரு தமிழர், சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
குஜராத் மாநில கடல் எல்லையில் பிடிபட்ட இந்த கப்பலில் போதை பொருட்களை ஏற்றியது தாவூத் இப்ராஹிம் ஆட்கள் என்று கூறப்படுகிறது.
 
இந்த கப்பலில் இருந்த 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையில் பால் திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கப்பலில் பிடிபட்ட போதை பொருட்கள் தாவூத் இப்ராஹிம் சரக்கு என்பது உண்மையானால் இது அவருக்கு கிடைத்த மரண அடி என்பதும் அது தமிழரால் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments