Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் இணைய காரணம் என்ன? ரகசியத்தை போட்டுடைத்த திருமா

மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் இணைய காரணம் என்ன? ரகசியத்தை போட்டுடைத்த திருமா

மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் இணைய காரணம் என்ன? ரகசியத்தை போட்டுடைத்த திருமா
, செவ்வாய், 7 ஜூன் 2016 (15:00 IST)
மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இணைய காரணம் என்ன என்பதை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
அரியலூர் மாவட்டம், அங்கனூரில் ஒரு நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆளும்கட்சியான அதிமுக அரசும், எதிர்க்கட்சியான திமுகவும் இணக்கமாக செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு மக்கள் நலக்கூட்டணி ஒரு காரணம் ஆகும்.
 
எனது தொகுதி வாக்கு எண்ணிக்கையில், அதிகாரிகள் ஆளும்கட்சிக்கு சாதமாக நடந்தததால் தான் தோல்வி அடைந்தேன். எனவே மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்.
 
கூட்டணி ஆட்சி என்கிற கருத்துக்கு திமுக உடன்பட்டிருந்தால், தேமுதிக தலைவர் விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு சென்று இருப்பார். திமுகவும் ஆட்சியைப் பிடித்து இருக்கும். ஆனால் திமுக, கூட்டணி ஆட்சிக்கு உடன்படவில்லை.
 
அதை வெளிப்படையாக அறிவித்துவிட்டது. இதனால் தான் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்தது என்ற ரகசியத்தை போட்டு உடைத்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லுங்கி கட்டிக்கொண்டு கல்லூரிக்கு வந்த மாணவிகள்: ஜீன்ஸ்க்கு தடை விதித்ததால் நூதன எதிர்ப்பு!