Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..!

Webdunia
சனி, 4 மார்ச் 2023 (13:34 IST)
வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் மீது கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வேலை செய்துவரும் வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருவதாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. மேலும் பழைய வீடியோக்கள் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே அமைச்சர் மா சுப்பிரமணியன் உட்பட ஒரு சிலர் தமிழகத்தில் வட இந்திய தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்கள் தாக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்தனர்
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேறு மாநிலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களின் வீடியோக்களையும் படங்களையும் தமிழ்நாட்டில் நடைபெற்றதாக வேண்டுமென்றே வதந்தி பரப்பி அச்சத்தையும் பீதியையும் பரப்புவோர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இது என்றும் இதனை நம்மை விட மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து வாழும் மக்களை அழுத்தமாக சொல்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார். ஊடகங்கள் தொலைக்காட்சி நிறுவனங்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் தங்களின் சமூக பொறுப்பை உணர்ந்து ஊடக நெறிமுறைகளோடு செய்திகளை வெளியிட வேண்டும் என்றும் செய்திகளை உறுதிப்படுத்தாமல் பரபரப்புக்காக வெளியிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments