கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதி அல்ல.. வரலாறு தெரியாமல் உளருகிறார்கள் : முதல்வர் ஸ்டாலின்..!

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (12:46 IST)
கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாக எந்த காலத்திலும் இருந்ததில்லை என்றும் வரலாறு தெரியாமல் கச்சத்தீவு குறித்து உளருகிறார்கள் என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  
 
மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என்பதே திமுகவின் கொள்கை என்றும் அவர் தெரிவித்தார்.  கச்சத்தீவை திமுக அரசு தாரை வார்த்துவிட்டதாக வரலாறு தெரியாமல் உளறுகிறார்கள் என்றும் கலைஞரின் எதிர்ப்பை மீறி தான் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். 
 
கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க போடப்பட்டது ஒப்பந்த மட்டுமே என்றும் சட்டம் இல்லை என்றும் அவர் கூறினார். இலங்கைக்கு வழங்கப்பட்ட பிறகும் பிரதமர் இந்திராவை சந்தித்து கச்சத்தை மீட்க வேண்டும் என கலைஞர் வலியுறுத்தினார் என்றும் கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாக எந்த காலத்திலும் இருந்ததில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments